யாரவள்

ஆண்வர்க்கமற்ற
அந்தப்புரத்திலிருந்து
வந்திருப்பாளோ
மச்சான் அவ என்னைப்
பார்க்கிறாடா
இல்ல அவ என்னைத்தான்
பார்க்கிறாடா
இதற்குள் இன்னொருத்தன்
சிரிக்கிறாடா
பசியால் தவித்த பூனைக்கு
பஞ்சு மிட்டாய் கொடுத்த
மழலையைப் பார்த்துத்தான்
புன்னகைத்தாள் என்பதை
என்னிறைவனைத் தவிர
வேறு யார்தான்
அறிந்திருக்கப் போகிறார்.!
11 July 2016 at 09:40

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:19 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 458

மேலே