வாழ்க்கை உன்கையில்
பைகளுக்குள் அடக்க வேண்டியதை...
வேண்டாத நேரத்தில் - உன்
கைகளுக்குள் அடக்கி....!
கண்... காது... வாய்...
இம்மூன்றிற்கும் பாலங்கலாக அமைத்து....!!
கவனம் சிதறிப் போகையில் ...
சாலையில் உன்னை சிதைத்துவிட ,
எதிர் நோக்கியிருக்கும் எமனுக்கு ...
உயிரைத் தாரைவார்க்க ,
உன்னை மறந்து செல்லலாமோ...!?!?