arasu இயல்

ஊடகமும் செய்தியும் பொய்யாய் போனதால்
உண்மையை எங்கே என்று தேடுகிறோம்

வேண்டாத அணு உலையை
திணித்துவிட இடம் இருக்கு

வேண்டும் மருத்துவம்
திறந்திட இடம் இல்லையா?

இலைக்கு கொடுத்த மரியாதையை
என் இனத்துக்கு கொடுக்க மறந்தது ஏன் ?

இயற்கை சீற்றத்தை ஏதும் சொல்லவில்லை
காத்திட மறந்தது மறுத்தது ஏன் ?

காற்றை வித்தவனுக்கு
சீக்கிரமாய் (----------- தண்டனை ) விடுதலை

நீட் கொலைக்கு
தீர்ப்பு அலை எங்கே

பிரிவினை தான் பெருகி கிடக்குது
மன்னருக்கும் மக்களுக்கும் தீர்ப்பு எனும் பெயரில்

மக்களாட்சி மறந்து பல நாள் ஆச்சு
இது --------மன்னார்------ ஆட்சி னு யாருக்கும் தெரியாமலா போச்சு

எழுதியவர் : vanmathi gopal (7-Jan-18, 1:13 pm)
பார்வை : 294

மேலே