அன்புள்ள பேரனுக்கு

என் குட்டி நிலா வருகுது
பட்டு பூவ
விரிச்சு வை....
என் சிட்டு குட்டி வருகுது
பஞ்சு மெத்த
போட்டு வை ....
மணந்து கிடக்கும்
அவன் மேனி .....
முத்து பல்லு காட்டும்...
துள்ளி துள்ளி ஓடும் ...
உன் ஒத்த வார்த்த
கேட்க விடி காலைல
விழிச்சு கிட்டேன்
என் கண்ணாட்டி ......
உன்ன தொட்டு தூக்கத்தானடா
இன்னும் இந்த பட்டி உசிரு
துடிக்குது

உன் அப்பனுக்கு காத்திருந்தேன்
'அம்மா டைம் இல்லமானு ' சொல்லுவான்
பேரனுக்கு காத்திருக்கேன் ...
என்ன சொல்லுவ கண்ணு .....
ஏக்கத்தில என் உசிரு ஏங்கித்தான் கிடக்குது .....
இது பாசத்துக்கு வந்த ஏக்கம் ....
பணத்துக்கு இல்லையப்பா ........

நீ வருவேன்னு சேதி கேட்டு
வழி மேல காத்திருக்கேன் ......

இப்படிக்கு
உன் பாட்டி

எழுதியவர் : நிஷா (8-Jan-18, 3:37 pm)
பார்வை : 68

மேலே