Nishu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Nishu
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Dec-2017
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  26

என் படைப்புகள்
Nishu செய்திகள்
Nishu - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2019 4:58 pm

கல்லறையில் ஓர் நெற்கதிர்
மண்ணறைக்குள் வாழ்வது ஓர்
பெண் சிசு....
அம்மா' என் பிஞ்சு விறல் பதிய
இம்மண்ணுலகில் இடமில்லையோ jQuery171047296866857488495_1549536810177?
இறைவன் பெண்ணுக்கு
இவ்வுலகை படைத்திடவில்லையோ ???
குடிசையில் பிறந்ததாலே என்னை
நெற்பயிரில் நெறுக்கினாயோ ???
கோட்டைக்குள்ளும் கால் பதிக்கும்
காலம் இப்போ வந்ததம்மா .....
பெண்ணாக பிறந்ததாலே
என்னை கண்ணீரில் கரைத்து விட்டாயோ ??

மேலும்

Nishu - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2019 4:48 pm

ஆறு வருஷம் ஆயிடுச்சு
அவனோட மனைவியா மாறியாச்சு ....
கொட்டுற மழையிலயும் என பாக்க வந்துடுவான் ....
நான் சிரிக்கிற சிரிப்பிலேயே அத்தனையும் மறந்துடுவான் .....
என்ன என்ன பிடிக்குமுன்னு தேடி தேடி வாங்கிடுவான் ....
சின்ன சின்ன சண்டையிலயும் சிரிச்சு என்ன மயக்கிடுவான் ....
ஒரு நாளு பேசலைனாலும் கைபேசிய நொந்துக்குவான் .....
ஒரு நாளு பாக்கலைனாலும் கடவுளையே திட்டிடுவான் ....
நெஞ்சோடு அணைச்சுக்குவான் .......
நித்தமும் நினைக்க வெப்பான்.....
சொன்ன சொல்லு மாற மாட்டான் .....
நினச்சதுமே வந்து நிப்பான் .....
சிப்பிக்குள்ள முத்து போல என பொத்தி வெச்சு காத்திருப்பான் .....
இவன் அன்புக்குள்ள மயங்கவெச்சான

மேலும்

மிக்க நன்றி இருவருக்கும் .. 04-Feb-2019 8:43 pm
உண்மையான அன்பின் வெளிப்பாடாய் பிரதிப்பலிக்கிறது தங்கள் வரிகள்... 02-Feb-2019 12:34 am
velinaatu vaalkaiin nitharsanam 01-Feb-2019 5:02 pm
Nishu - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2019 4:48 pm

ஆறு வருஷம் ஆயிடுச்சு
அவனோட மனைவியா மாறியாச்சு ....
கொட்டுற மழையிலயும் என பாக்க வந்துடுவான் ....
நான் சிரிக்கிற சிரிப்பிலேயே அத்தனையும் மறந்துடுவான் .....
என்ன என்ன பிடிக்குமுன்னு தேடி தேடி வாங்கிடுவான் ....
சின்ன சின்ன சண்டையிலயும் சிரிச்சு என்ன மயக்கிடுவான் ....
ஒரு நாளு பேசலைனாலும் கைபேசிய நொந்துக்குவான் .....
ஒரு நாளு பாக்கலைனாலும் கடவுளையே திட்டிடுவான் ....
நெஞ்சோடு அணைச்சுக்குவான் .......
நித்தமும் நினைக்க வெப்பான்.....
சொன்ன சொல்லு மாற மாட்டான் .....
நினச்சதுமே வந்து நிப்பான் .....
சிப்பிக்குள்ள முத்து போல என பொத்தி வெச்சு காத்திருப்பான் .....
இவன் அன்புக்குள்ள மயங்கவெச்சான

மேலும்

மிக்க நன்றி இருவருக்கும் .. 04-Feb-2019 8:43 pm
உண்மையான அன்பின் வெளிப்பாடாய் பிரதிப்பலிக்கிறது தங்கள் வரிகள்... 02-Feb-2019 12:34 am
velinaatu vaalkaiin nitharsanam 01-Feb-2019 5:02 pm
Nishu - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2018 2:35 pm

பயணி: கண்டக்டர் அண்ணே ! மதுரைக்கு போகணும் . டிக்கெட் எவ்ளோ?
கண்டக்டர்: 690 கொடு.
பயணி: அண்ணே டிக்கெட் எடுக்கலைனா பைன் எவ்ளோ ?
கண்டக்டர்: பைன் 500 ரூபா கட்டணும்.
பயணி: அப்போ இறங்கும்போது நான் 500 ரூபா பைன் கட்டிக்கறேன்
கண்டக்டர்: ????

மேலும்

பாராட்டுக்கள் சென்ற வார சிறந்த எழுத்து தள நகைச்சுவையாக தேர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் உங்கள் நகைச்சுவை இலக்கியம் தொடரட்டும் 30-Jan-2018 6:11 am
Ha...ha...sema 28-Jan-2018 12:58 pm
Nishu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2018 7:51 pm

=> இன்ஸ்பெக்டர் சார், இன்ஸ்பெக்டர் சார், என் பொண்டாட்டிய காணோம்..
=> யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா
=> ஐயோ !! சந்தோஷத்துல எங்க போறதுனே தெரியலையே !!!!

மேலும்

ரொம்ப நல்லாயிருக்கு நிஷா ! 27-Jan-2018 4:43 pm
Nishu - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2018 4:33 pm

ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஓர் முதலை பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான் . திடீரென ஓர் அறிவிப்பை விட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு 10 லட்சம் பரிசு என கூறினான்.
நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்தால் அவரது மனைவிக்கோ , உறவினருக்கோ 5 லட்சம் தருவதாக கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் நின்றிருந்த வேளையில் ஒரு தைரியசாலி மட்டும் குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நீந்தி கரையை அடைந்தான் . 10 லட்சம் பரிசையும் வென்றான் .
வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசால

மேலும்

நண்பரே இது வெறும் நகைசுவைக்காக மட்டுமே.... பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் தான் பணம் படுத்துகிறது பாடாய்....... தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி !... 20-Jan-2018 7:38 pm
சிறந்த நகைச்சுவையாக இந்த வாரம் தேர்வு ஆனதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 16-Jan-2018 11:29 am
ஒவ்வொரு ஆணின் பின்னாலும் சில மனைவிகள் பேய் குணத்தோடு பணத்தாசை பிடித்து அலைகிறார்கள் கல் பெண்களை நம்பாதே ! பணம் படுத்தும் பாடு 16-Jan-2018 11:23 am
Nishu - Nishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2018 3:37 pm

என் குட்டி நிலா வருகுது
பட்டு பூவ
விரிச்சு வை....
என் சிட்டு குட்டி வருகுது
பஞ்சு மெத்த
போட்டு வை ....
மணந்து கிடக்கும்
அவன் மேனி .....
முத்து பல்லு காட்டும்...
துள்ளி துள்ளி ஓடும் ...
உன் ஒத்த வார்த்த
கேட்க விடி காலைல
விழிச்சு கிட்டேன்
என் கண்ணாட்டி ......
உன்ன தொட்டு தூக்கத்தானடா
இன்னும் இந்த பட்டி உசிரு
துடிக்குது

உன் அப்பனுக்கு காத்திருந்தேன்
'அம்மா டைம் இல்லமானு ' சொல்லுவான்
பேரனுக்கு காத்திருக்கேன் ...
என்ன சொல்லுவ கண்ணு .....
ஏக்கத்தில என் உசிரு ஏங்கித்தான் கிடக்குது .....
இது பாசத்துக்கு வந்த ஏக்கம் ....
பணத்துக்கு இல்லையப்பா ........

நீ வருவேன்னு சேத

மேலும்

குழி விழுந்த பின்னும் உன் புன்னகையில் என் நிலாக்காலம் உதிக்கின்றது இப்படிக்கு உன் பாட்டி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 8:18 pm
Nishu - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2018 4:10 pm

அலை போல்
சிணுங்கும் அவள்
அலைக்கற்றை குழலொதுக்கும்
இரு விரலின்
இடைவெளிக்குள்
என்
இதயத்தை செருகிவிட்டாள் !!...
தொலைந்து போன
மனதை
தொலைதூரம் தேடினேன் ....
வெகு தூரம் ஓடினேன் .....
எனதருகில் நின்றிருக்கும்
என்னவளின்
சிறு விழியில்
மயங்கியிருப்பதை
மறந்து !!....

மேலும்

மிக்க நன்றி உங்களின் பகிர்விற்கு 08-Jan-2018 2:52 pm
தேடும் பாதையில் தொலைந்து போவது தான் இந்த காதலின் வாடிக்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2018 10:36 pm
Nishu - Nishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2018 4:43 pm

கண்ணு பட்டு போகுமென
த்ரிஷ்டி பொட்டு
வெச்சு விட்டாளோ
உன் அம்மா ??
கருவறைக்குள்ள காவல் வெச்சு
பொத்தி பொத்தி
வளத்தாலோ
உன் அம்மா ??
ஊர் கண்ணு உலக கண்ணெல்லாம்
உன் மேல பட கூடாதுன்னு
முந்தானையில மூடித்தான்
வீதி உலா அனுப்பி
வெச்சாளோ
உன் அம்மா ??
திட்டம் போட்டு செய்யலைனாலும்
திருட்டு தனமா
ரசிச்சுப்புட்டேனடி
ராசாத்தி .....
உன்னழக பாடத்தான்
ஒரு வார்த்த இல்லையேடி
கண்ணாட்டி....
செக்கு போல சுத்தி வரேன்
செத்த நேரம்
நின்னு புள்ள
சோளி போட்டு பாத்து புட்டேன்
உன சொந்தமாக்க நேந்து கிட்டேன்
அத்தனையும் அள்ளி தாரேன்
உன்ன மட்டும்
தருவாளா
உன் அம்மா ???....

மேலும்

உண்மையான காதலின் அர்த்தங்களை உலகம் இன்னும் புரிந்து கொள்ள வில்லை புரிந்து விட்டால் இங்கு நீதி மன்றங்களுக்கு வேலை இல்லை !!!! உலகம் ஓர் நாள் மாறும் !!! 08-Jan-2018 2:48 pm
காதல் என்ற சொல்லில் இணைந்த உள்ளங்கள் பல இன்று நீதிமன்ற வாசலில் கூட்டம் கூட்டமாய் குவிந்து கிடக்கின்றது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2018 10:44 pm
Nishu - Nishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 4:00 pm

நீ வருவாய் என
காத்திருந்தேன் .....
உன் நிழலை
என் விழிகள்
தேடி கொண்டிருந்தது ....
ஆனால்...
நாற்பது நாழிகைகள் ஆனது
கண்ணே
நாணத்துடன் நீ என் அருகில்
வந்து நின்று ....
நான்
என்னை மறந்தேன் !!!.....

மேலும்

Nishu - Nishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 3:35 pm

முதன் முதலாய்
ஓர்
சின்னஞ்சிறு ஜீவனின்
பிரவேசம்
என்
கருவறைக்குள் !!!
இரு நாடி துடிப்பு ......
உடலில் ஓர்
படபடப்பு .......
மனதில் இனம் புரியா
களிப்பு .....
இருவரின் சுவாசமும்
உன் ஓர் உயிருக்காக .....
இப்பொழுதெல்லாம்
என் ஆடை
என் அளவில் இல்லை...
சரியாக சொல்ல வேண்டுமானால்
என் ஆடையின் அளவில்
நான் இல்லை !!!....
உன் அம்மா எனும்
ஒற்றை மொழி
கேட்க
பத்து மாதங்களாய்
தவம் இருக்க
நேந்து கொண்டேன் !!!....
காத்திருக்கிறோம் இருவரும் ......
நின் பாதம்
புவி தொடும்
நாளுக்காக !!!.........

இப்படிக்கு
உன் அம்மா

மேலும்

Nishu - Nishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 4:29 pm

எனை பாராத
நின்
விழிகள் ....
எனை தேடாத
நின்
இமைகள்.....
எனை காணாத
நின்
கனவு .....
எனை நினையாத
நின்
நினைவு .....
எதையும் சகித்திடாது
என்
மனது !!!.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே