ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஓர் முதலை பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான் . திடீரென ஓர் அறிவிப்பை விட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு 10 லட்சம் பரிசு என கூறினான்.
நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்தால் அவரது மனைவிக்கோ , உறவினருக்கோ 5 லட்சம் தருவதாக கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் நின்றிருந்த வேளையில் ஒரு தைரியசாலி மட்டும் குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நீந்தி கரையை அடைந்தான் . 10 லட்சம் பரிசையும் வென்றான் .
வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான் . " இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த என்னை தள்ளி விட்டுட்டியே .. ஒரு வேலை நான் செத்திருந்தா" ?
மனைவி அமைதியாக சொன்னாள் " அப்போதும் எனக்கு 5 லட்சம் கிடைத்திருக்கும் இல்ல ? "