அது ஒரு கனா காலம்

ஆறு வருஷம் ஆயிடுச்சு
அவனோட மனைவியா மாறியாச்சு ....
கொட்டுற மழையிலயும் என பாக்க வந்துடுவான் ....
நான் சிரிக்கிற சிரிப்பிலேயே அத்தனையும் மறந்துடுவான் .....
என்ன என்ன பிடிக்குமுன்னு தேடி தேடி வாங்கிடுவான் ....
சின்ன சின்ன சண்டையிலயும் சிரிச்சு என்ன மயக்கிடுவான் ....
ஒரு நாளு பேசலைனாலும் கைபேசிய நொந்துக்குவான் .....
ஒரு நாளு பாக்கலைனாலும் கடவுளையே திட்டிடுவான் ....
நெஞ்சோடு அணைச்சுக்குவான் .......
நித்தமும் நினைக்க வெப்பான்.....
சொன்ன சொல்லு மாற மாட்டான் .....
நினச்சதுமே வந்து நிப்பான் .....
சிப்பிக்குள்ள முத்து போல என பொத்தி வெச்சு காத்திருப்பான் .....
இவன் அன்புக்குள்ள மயங்கவெச்சான் .... அடிமையா ஆக்கிவெச்சான் .....
பெத்தவங்க ஆசியோட மாலையிட்டு மணமுடிச்சான் ......
ஆறு வருஷம் ஆயிடுச்சு
அவனோட மனைவியா மாறியாச்சு ....
இப்போ ரெண்டு வருஷம் ஓடிப்போச்சு
அவன் வேற தேசம் மாறி போயி.......
பத்து புள்ள பெத்தவனெல்லாம் பெண்டு புள்ளையோட வாழுறானே .....
நான் ஒத்த புள்ள பெத்ததுக்கே
கடல தாண்டி வாழுறயே .....
உன் ஒத்த முகத்தை பாக்கத்தானே நித்தம் உயிர் வாடுதே .....
நீ சேத்து வெச்ச சொத்து சுகம் உன் வேதனைய கூறுதே .....
அழுகறேனே... அணைச்சுக்கத்தான் நீ இல்ல ...
தவிக்கிறேனே.... வந்து நிக்க ஆளில்ல.....
'அப்பா'ன்னு கேக்கறப்போ நிழல் படத்தை காட்டி வெப்பேன் ...
நிஜமான உருவத்துல எப்போ நீ வந்து நிப்ப???
குளிரலேயும் மழையிலயும் பட்ட பாடு போதுமடா ....
சொட்டு கஞ்சி குடிச்சாலும் ஒட்டியிருந்து வாழ்வோமடா !!!!....

எழுதியவர் : நிஷு (1-Feb-19, 4:48 pm)
சேர்த்தது : Nishu
பார்வை : 110

மேலே