பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

யார் வேண்டுமாயினும்
என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்
எதை சொன்னாலும் கேட்டு கொண்டு போகும்
எம் இனத்தவர் மீது
எத்தனையெத்தனை தாக்குதல்கள்
எழுத்துக்களால் வார்த்தைகளால்
அத்தனையும் சகித்து போகும் எம்மினம்
சித்தம் பொங்கினால் என்னாகும்
சமூகத்தின் களிப்புக்கே
கவிதைகளும் காவியங்களும்
சமூகத்தை அவலப்படுத்தும்
சமுகத்தின் நலம் பேணா
கவிதைகளும் கவிஞர்களும்
காசினிக்கு தேவை இல்லை
சமூகத்தின் இதயத்தை குதி கிழித்து விட்டு
சாரி என்ற ஒற்றை வார்த்தையால்
ஓரிதழ் மலரில் ஒளிந்து கொள்ளும்
உலுத்தர்கள் தேவையா ?
நம்பிக்கைகளின் அடித்தளத்தில்
நம்மால் எழுப்பப்பட்ட மாளிகையின்
அடிச் செங்கல்லை உருவும்
அற்பர்கள் அவனுக்கு தேவையா ?
ஆயிரமாயிரம் வேதனைகளும்
பாயிரமாய் தொடர்ந்தாலும்
நாவினிக்க மனமினிக்க
நம்மை நாடி வரும் பொங்கல் திருநாளில்
நாம் மனமார வாழ்த்துவோம்
நாமும் நம்மோடு நம்மினமும்
நலம் பல பெற்று வாழ்வாங்கு வாழ்கவென

ச ரவிச்சந்திரன்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (14-Jan-18, 3:17 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
Tanglish : pongal vaazthu
பார்வை : 43

மேலே