காதலும் கடவுளும்

நீ எண்ணை ஊற்றி
பற்ற வைத்தாய் விளக்கை;
நான் என்னை உன்னில் ஊற்றி
பற்ற வைத்துவிட்டேன் காதலை
என் நினைவால்
கவிதை எழுதுகிறாய்
எழுத்துப்பிழையால் வார்த்தையை
அடித்து எழுதுகிறாய் - நீ
அடித்தது என்னமோ எழுத்துக்கு
வலித்தது என்னமோ எனக்கு..!!!
காதலும் கடவுளும்
கற்றுத்தருவது ஒன்றுதான்
"முழுமையாக நம்புவது".