தித்திக்கும் பொங்கல்
வேர்வை ரத்தம்
உரமாக்கி
வெயில் குளிரில்
பாடுபட்டு
கொண்டுவந்த
குண்டுநெல்ல
பக்குவமா
குத்தியெடுத்து
புதுப்பானை
அடுப்போட
மஞ்சள் கரும்பு
துணையோட
புத்தாடை அணிந்து
மகிழ்ந்து
சொந்தபந்தம்
கலந்தினைந்து
பொங்கிவரும் பொங்கலைக்கண்டு
பொங்கலோ பொங்கலென்று
சூரியனுக்கு வணக்கமிட்டு
சூழ் சொந்தங்களுக்கு
மகிழ்ச்சியுட்டும் பொங்கல்
தித்திக்கும்
தை பொங்கல்...
-கோராத