பிரியா விடை

கூட்டை விட்டு பறந்து செல்கின்றோம்...
கூடி வாழ்ந்த வீட்டை விட்டு பறந்து செல்கின்றோம்...

கடைசி நிமிடம் வரை கதைத்துக் கொண்டிருந்தோம்...
கண்ணீர் துளி சிந்திடாமல் கதைத்துக் கொண்டிருந்தோம்...

பாடி பறக்கும் பறவை கூட்டம் போல்
பழகி களித்தோம் தோழர்களே....
அடுத்த நொடியின் பயம் அறியாமல்
அழகியல் வாழ்வு வாழ்ந்து வந்தோம்...

இனி எங்கு காணப்போகிறோம்...
இனிமையான நினைவுகளை எப்போது பகிர போகிறோம்..

வாதங்கள் நூறு..
விவாதங்கள் நூறு...

சிறு பொழுதில் மறந்து விட்டு
சிறுபிள்ளை சிரிப்பது போல்
சிரித்துக்கொண்டோமே..
சிறகடித்து திரிந்து வந்தோமே...

பிரிவு எண்ணும் வார்த்தையின் பொருள்
பிரிவை தொட்டவுடன் புரிந்து கொண்டேனே..

இதயக் கூட்டையும் உடைக்கும் என
புரிந்துக் கொண்டேன்...
இதயம் தரையில் விழுந்து தத்தளிக்கும்
என்பதையும் தெரிந்துக் கொண்டேன்....

பசுமை நிறைந்த நினைவுகள்
பசுமரத்தாணி போல் என்றும்
நிலைத்து நிற்குமே.... என்றுமே......
நிலைத்து நிற்குமே.... 😢
😢😢😢😢😢😢😢

எழுதியவர் : புகழ்விழி (29-Jan-18, 9:40 pm)
Tanglish : priya vidai
பார்வை : 1007

மேலே