பாசம்
கடந்து செல்ல மறுக்கும் நேரம்
காத்திருக்கும் என் கால்கள்
உன் கருவரை நோக்கி
என் பயனம் தொடரும்....
அன்னையே! வழி தேடும்
வலிகள் நிறைந்த
என் மனதிற்கு வழிவிடும்
தெய்வம் நீயே அன்பே....
தேடி கிடைத்த எதுவும்
இல்லை நீ
என்னில் புதைந்த
உயிர் நீ....
ஊதி தள்ளிவிட்டது
உலகம் என்னை
அருகில் நீ இல்லா
இந்த நிமிடத்தில்
உன்னை சுத்தி சுத்தி
விளையாடிய நான்
இன்று சுத்த விட்டு
ஓடிய நாட்கள் என் நினைவில்...