நாகரீகம்
அவன்
இறைவனை
விமர்சித்தானென்று
அவனை
ஈன்றவளை
விமர்ப்பதே
என் தேசத்தின்
நாகரீகம் !
வருத்தமோ !
மன்னிப்போ !
தவறு
இழைத்தவனின்
மனதிலிருந்து
வர வேண்டுமே
தவிர
உதைப்பேனென்றால்
வந்துவிடுமா ??
உருளும்
உலகில்
நீயும் நிற்பாய்
இந்த கூண்டில்
அன்று
உனக்கு
துணையாய்
நீ உதிர்த்த
வார்த்தை விதைகள்
முளைத்து
நிற்காது !
நம்பிக்கையை
கொன்றானென்று
நாகரீகத்தை
கொல்லாதே !
இது
தமிழன் தேசம்