நாளும் ஒரு பொழப்பு

நாளும் ஒரு பொழப்பாய்
நாறிப்போனது விவசாயம்..!
வாழும் வழியின்றி
வாடிப்போனது என் கிராமம்..!

மழைதண்ணி ஏதுமில்லை
மாடு ஆடுக்கும் புல்லில்லை..!
களத்துமேட்டு கம்மாயில
களிமண்ண தவிர ஒண்ணுமில்லை..!

களை கூட முளைக்கல
கழனி வயலில..!
கருவேலம் வெட்டிதான்
கஞ்சியை குடிக்கிறோம்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (2-Feb-18, 12:52 am)
பார்வை : 975

மேலே