பள்ளி பருவம்

அழுகையுடன் பிடிக்காமல் பள்ளி வாசல் மிதித்தோம்,

வீட்டை தாண்டிய நேசம்தன்னை நண்பர்களால் அறிந்தோம் ,

கவலையின் சுவடாரிய காலமாய் எல்லார்க்கும் கண்முன் வருவது இந்த பள்ளி பருவம்,


கடந்து வந்த ஒவ்வொரு நாளும் சொர்கம் என்று
இப்பொது உள்ளுக்குள் உணர்கிறோம்,

நட்பு ஒழுக்கம் கல்வி என பல தந்தது பள்ளி !

நல்லதொரு எதிர்காலம் தந்தது இந்த பள்ளி ...

பசுமையான நினைவுகளை அல்லி தந்தது பள்ளி ..

மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்

நினைத்தால் நெஞ்சினில் இனிக்கும்

மறந்தாலும் மனதை விட்டு அகலாது

அதுவே நம் பள்ளி பருவம்!!

மீண்டும் செல்ல முடியாத இடம் தாயின் கருவறை மட்டுமன்றி பள்ளி பருவமும் தான் !!!

எழுதியவர் : கீர்த்தி (3-Feb-18, 12:54 pm)
சேர்த்தது : keerthi
Tanglish : palli paruvam
பார்வை : 4957

மேலே