பொறுமை

வேப்பங்காயும் இனிக்கும்
கனியாகும் வரை காத்திருந்தால்.,,,
இனிப்பை தரும் கனிகள்
காத்திருந்தன ....,
மரங்கள் மழைக்காக ,
கிளைகள் பருவகாற்றுக்காக,
மொட்டுகள் மலர்வதற்காக ,
மலர்கள் பிஞ்சாக ,
பிஞ்சுகள் காயாக ,
காய்கள் கனியாக ,...
இதற்குக்கூட பொறுக்க
மனமில்லையேல் ..,
இதை மண் திருத்தி விதைத்து
வளர்த்து காத்து பராமரித்து
அறுவடைக்கு காத்துக்கிடக்கும் விவசாயின்
பொறுமையை என்ன சொல்வது .

எழுதியவர் : (5-Feb-18, 3:35 pm)
Tanglish : porumai
பார்வை : 68

மேலே