முதுமொழிக் காஞ்சி 19

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அறிவுசோர் வுடைமையிற் பிறிதுசோர்வும் அறிப. 9

அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

ஒருவன் தன்னறிவில் தெளிவில்லாதவன் என்றால், அவனது மற்ற எல்லாவித அறிவுக் குறைபாடும் தடுமாற்றமும் அறியப்படும்.

பதவுரை:

அறிவு சோர்வு உடைமையின் - ஒருவன் அறிவு தளர்ச்சியுடையனா யிருத்தலால்,

பிறிது சோர்வும் - அவனிடத்துள்ள ஏனையத் தளர்ச்சிகளையும், அறிப - அறிவர்.

கருத்து:

ஒருவன் பலவகைத் தளர்ச்சிகளையும் உடையவன் என்பதற்கு அவனுடைய அறிவின் தளர்ச்சியே அறிகுறி:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-18, 2:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

புதிய படைப்புகள்

மேலே