உன்னைக்காணாமல்

உன்னைக்காணாத
என் நாட்கள் நீளமாய்.,
ஒவ்வொரு நொடி யும்.,
உன்னுடன் பேசிக்கொண்டே.(உள்ளுக்குள்.)
நேரில் எவ்வாறு..?
காணாத போது அருகிலும்
கண்ட போது தொலைவிலும்
உன்னைக்கடக்கையில்
உன் வலி நான் அறிவது போல
நீயும்என் வலி உணர்வாய்
என்று வருவாய்.? காணாது
நூறு கதை பேசும் நான்
கண்ட பின் மௌனியாய்
கண்ணீர்க்குளத்தில் நீந்தும்
மீனாவேனோ.?விடையற்ற
கேள்வியாய் நான்.,
விளங்கா விடையாய் நீ..,

எழுதியவர் : sana (20-Feb-18, 8:34 am)
சேர்த்தது : Sana
பார்வை : 327

மேலே