காதுகளை கிழிக்கவில்லையா

நாங்கள் தீவிரவாதிகள் தான்
என் சொந்தங்கள் ஈராக்கில் கொல்லப்பட்டப் போதும் அவர்களுக்காக போராடாத நாங்கள் தீவிரவாதிகள் தான்..
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் ஒசாமாவை தேடி அப்பாவி மக்கள் கொல்லப்பட்டப் போது கண்டு கொள்ளாத நாங்கள் தீவிரவாதிகள் தான்..
பாலஸ்தீனிலும் மீயான்மரிலும் என் சமுதாயத்திற்கு நடந்த கொடுமைளை கண்டு கொள்ளாத நாங்கள் தீவிரவாதிகள் தான்..
என்னுடையது என்று எல்கையில் தினமும் போராட்டத்தில் வாழும் காஷ்மீர் மக்களுக்காக போராடாதா நாங்கள்..
இப்போது சிரியாவிலும் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதரவு என்ற பெயரில்
அழிக்க தூண்டும் ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளை கண்டுகொள்ளாத நாங்கள் தீவிரவாதிகள் தான்..
ஐரோப்பிய நாடுகளில் சிறிய குண்டு வெடிப்புகளுக்கே கதறிய ஊடங்களும் உலக நாடுகளின் தலைகளும் ஐ.நா. சபையும் இப்போது எங்கே சென்றது..
இப்போது சிரியாவில் நடப்பது உங்கள் கண்களுக்கு தெரியாவில்லையா.. பிஞ்சி குழந்தைகள் கதரும் சப்தம் உங்கள் காதுகளை கிழிக்கவில்லையா.. இல்லை முஸ்லிம் நாடு தானே என்று மூடி கொண்டு இருக்கிறீர்களா..

எழுதியவர் : முகமது மசூது (25-Feb-18, 11:17 pm)
சேர்த்தது : Masood skipper
பார்வை : 473

மேலே