நல்வாழ்வு
பிறருக்கு கொடுத்து வாழ்,
பிறரை கெடுத்து வாழாதே,★
நற்பெயர் எடுத்து வாழ்,
பிறன் பொருள் எடுத்து வாழாதே,★
உலகை சிரிக்க வைத்து வாழ்,
உலகம் சிரிக்க வாழாதே★
பிறர் நிறை சொல்ல வாழ்,
பலர் குறை சொல்ல வாழாதே★
நிலமடி போகும் வரை நிலமேல்
நல் வாழ்வு வாழ்ந்திடுவாயாக★