ஜனனமும் நீ மரணமும் நீ

அறுந்து இருக்கும் ....
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ
என் மரணமும் நீ ....!!!

பேசிய நீ
பேசாமல் இருப்பதுதான் ....
பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!

இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படைத்து விடு ....!

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (1-Mar-18, 2:56 pm)
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே