ஓவியம் உடைத்த தூரிகை

ப்ரியசகி...
(இப்படி கூடாதுதான்)
உன் மின்னஞ்சல்
நீ வரைந்த மர்மரேகை.
யார் அழிப்பர் தெரியாது.
நீண்டு செல்கிறது.
முகமும் முகவரியும்
அறியாது போயினும்
அறிய தேவையுமில்லை.
காதல் தெளித்த
நாகரிக நட்பை
ஏன் தரக்கூடாது?
உன் மாய மௌனம்
என் தனிமைக்குள்
வலி சூட்டி எரிக்க
நீளும் இரவினில்
உன் பொய் பெயரை
சொல்லிப் பார்த்து
சுமை தவிர்க்கிறேன்.
எண்கள் தரமறுத்தாலும்
எண்ணங்களை
தர மறக்காதே
ஒன்று மட்டும்......
வாட்ஸப் என்பது
அபினி வயலல்ல.
சொட்டும் வியர்வைக்கும்
கொட்டும் கண்ணீர்க்கும்
பலகையின் நெஞ்சம்
பாலம் அமைக்கும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Mar-18, 9:18 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 324

மேலே