உலகத்தை பாரடா

அன்பென்னும் மழையில்லா
அகிலத்தில் உயிர்கள் வாழ்வதில்லை,
பண்பென்னும் நதியில்லா
உலகத்தில் உயிர்கள் வளர்வதில்லை,

குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்று சொல்வது ஏனோ,
கருணை கொண்ட உள்ளத்தில்
கடவுள் வாழ்வதால் தானே,

மத சண்டை சாதி சண்டை
மண்ணில் வருவது ஏனோ ,
அன்பும் அரவணைப்பும்தான்
வாழ்க்கை என்பதை மறந்ததால் தானே,


கல்லை கூட கடவுளாக பார்க்கும் மனித,
கண்களில் கருணை கொண்டு உலகத்தை பாரடா .,

எழுதியவர் : புதுகை செநா (3-Mar-18, 10:03 pm)
பார்வை : 755

மேலே