எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே

குறிப்பெடுத்துக்
குறிப்பெடுத்தேக்
கூண் வளைந்தக்
கொடுப்பினை இருக்கிறதா
உன் தேகத்திற்கு?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!

உலகமே உறங்கிக்
கொண்டிருக்கும் பொழுது
உன்னுடல் மட்டும்
உழைத்து உழைத்து
வியர்வையில் குளிக்கிறதா?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!

உன் கண்ணீர்
பாய்ந்தேக் கண்ணீர்
பாய்ந்தேத் தலையணைப்
பூக்கள் துளிர்க்கிறதா?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!

எரிமலை கீழே
குடியிருப்பவன் போலே
எப்போதும் ஒருகண்
விழித்தே இருக்கிறாயா?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!

சிலசொல் சொல்லும்
சிலசொல் கொல்லும்
கொன்றது கூடவோ
உன் கணக்கில்
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!.

சில கை தட்டும்
சில கை குட்டும்
குட்டியது கூடவோ
உன் தலையில்?!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!

பத்து முறை
விழுந்தாலும் முத்தமிட்டு
சொல்கிறாயா பூமிக்கு
மீண்டும் எழுவேனென்று!
எனில் நீ சாதிக்கப் பிறந்தவனே!!

எழுதியவர் : விமுகா (5-Mar-18, 11:11 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 131

மேலே