உழவுக்கு வந்தனை செய்வோம்

உழவுக்கு வந்தனை செய்வோம்

ஏர்கலப்பை முன்பொன்வைத் தேருழப் பின்னவர்
ஏர்கள் தொடரும்பொன் ஏரையும் --- சீரெனத்
தேடின் பழமொழித் தேடுநீ ஏரையே
ஆடிப்பட் டம்உழவர்க் கே

நீரின்றி யிவ்வுலக மையாது நீரெதுவாம்
நீரும்நீ ரும்வேறா ஒன்றேதான் --- பாரில்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

உண்ண உணவீந்த மண்ணாளன் வள்ளலாய்
மன்னர்க்குத் தந்தாய் வரியாக --- மண்ணாள
உன்நிதிதான் மன்னவர்க் குப்பெருநி தித்தெரியும்
பின்யார் அவர்க்குமேத்தந் தார்

ஆசிரியப்பா
உழவர் யாருமன் றுபிச்சைகேட் டதில்லை
உழவர் மற்றவர்க் குதவிடு வரேன்றும் குபிச்சை போடுவர்
உழவர் உழைத்து வாழ்வார் பின்னவர்
பிழைக்ககைக் கட்டிசே வகம்செய் ததில்லை
உழும்போ தொருபலம் புழுதிகால் பலமாய்
உழுதுமாற் றிடத்தனி உரம்வேண் டாவாம்
உழவுத் தொழிலுக் குவந்தனை செய்வோம்
நிலமிருக் கஉழவன் ஏதுமில் லையென
நிலமகள் எள்ளிந கைத்திடு வாளாம்
வள்ளுவன் விளக்கிச் சொன்னார்
பொல்லா உழவரின் ஓலமோ டில்லியிலே!

தந்தா ரேதந் தாரே இலவச
மின்சா ரந்தந் தாரே உமக்கு
தந்தா ரேகிண றுவெட் டநிதி
தந்தார் கிணறா ழப்படுத் தநிதி
தந்தார் விதைநெல் மான்யத் தில்நிதி
தந்தார் உரங்களும் மான்யத் தில்நிதி
தந்தார் இலவச ஆலோ சனைப்பல
தந்தார் கொள்ளிடக் காவிரி நீரை
தந்தார் நாகைவ ரையும் தந்தார்
தந்தக டனால் வங்கியே திவாலாம்
தந்தக் கடனைத் தள்ளினார்
ஒவ்வொரு வருடமும் கடனைத் தள்ளினாரே!

பட்டா நிலத்தை பங்குபோட் டுவிற்றாய்
சொட்டுப் பாசனம் செய்யா துகெட்டாய்
தினமொரு போராட் டம்டில் லியிலே
தினந்தினம் நூதனப் போராட் டங்கள்
நெற்றியில் நாமமிட் டபோராட் டமொருநாள்
இடைக்கோ வணத்தில் போராட் டமொருநாள்
மொட்டைப் போட்டபோ ராட்டம்
தடைதடுப் பாரின் றிபோராட் டமாமங்கே!



ராஜப் பழம் நீ
12.3.2018

எழுதியவர் : பழனி ராஜன் (12-Mar-18, 9:51 am)
பார்வை : 3981

மேலே