முதுமொழிக் காஞ்சி 45
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன். 5
- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், வேறாய் உடன்படாத நெஞ்சத்தோன் நட்டோனல்லன்.
பதவுரை:
நேரா - ஒற்றுமைப் படாத, நெஞ்சத்தோன் - மனத்தையுடையவன்,
நட்டோன் அல்லன் - சினேகன் ஆகான்.
கருத்து:
மனவொற்றுமை இல்லாதவன் சினேகத்துக்கு உரியவன் ஆகான்
மனத்தி னமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று. 825 கூடாநட்பு
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். 785 நட்பு
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
