முதுமொழிக் காஞ்சி 45

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன். 5

- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், வேறாய் உடன்படாத நெஞ்சத்தோன் நட்டோனல்லன்.

பதவுரை:

நேரா - ஒற்றுமைப் படாத, நெஞ்சத்தோன் - மனத்தையுடையவன்,

நட்டோன் அல்லன் - சினேகன் ஆகான்.

கருத்து:

மனவொற்றுமை இல்லாதவன் சினேகத்துக்கு உரியவன் ஆகான்

மனத்தி னமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று. 825 கூடாநட்பு

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். 785 நட்பு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-18, 7:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே