விவசாயி

உணவு எனும் நீங்கா அமிர்தத்தை எமக்கு அளிப்பவன்
உமது பசியினை மறந்து ,எமது பசியை நீப்பவன்
தமிழன் என்ற சொல்லுக்கு பெருமை உடையவன்
காலங்களை எண்ணாமல் அயராது உழைப்பவன்
மருத நிலத்தை ஆண்ட அரசனாய் திகழ்ந்தவன்
மழைத்துளிகளை கண்டு கண்துளிகளால் மகிழ்ச்சி கொண்டவன்
விடியும்முன்பு ஏர்பூட்டி,வானம் பார்த்து நிலத்திற்கு உயிர் கொடுப்பவன்
சேற்றில் கால்வைத்து உணவு அளிக்கும் உன்னை வணங்குவதில்
பெருமை கொள்கிறேன்
அன்றோ தானியத்திற்கு நின்றவன்,இன்றோ மாணியத்திற்கு
நிற்கிறான்

எழுதியவர் : mani (20-Mar-18, 11:16 pm)
சேர்த்தது : mani
Tanglish : vivasaayi
பார்வை : 2215

மேலே