ஜோதிடம் ...!
பனிரெண்டு கட்டங்களுக்குள் அடக்கம்
பாவி மனிதனின் வாழ்கை ..!
சந்திரனும், சூரியனும் தன்வேலையை
செய்ய, மனிதன் மந்திரம்
மாயம் செய்யும் தந்திரம் தேவையோ..?
எந்திரம் ஆளும் இருபத்தியோராம் நூற்றாண்டில் ,
மந்திரம் மனித வாழ்க்கையை மாற்றும் என்றும் ,
தந்திரம் தனம் சேர்க்கும் என்றும் ,
நாளைய சரித்திரம் படைக்கபோகும்
இன்றைய இளவல்களுக்கு மந்திரத்தின் மீது
மயக்கம் உண்டாக்கும் மடையர்களுக்கு ,
யந்திரன் கொண்டு மன கண்ணிமை திறந்து
தன திறமை வளர்த்து மனித நேயத்தை உரைத்து
புதிய உலகை படைத்திடுவோம்..!
புவியை மாற்றி அமைத்திடுவோம்..!!
வளியை படித்திடும் வழியை படித்திடுவோம்..!!!
சாமானியன் மூளை எனும் யந்திரன் கொண்டு
புது சரித்திரம் படைத்திடுவோம்..!!!!!
வசிகரன்.க

