நண்பன்,நட்பு

தாயின் அன்பும், அரவணைப்பும்
தந்தையின் கண்டிப்பும்
நல்ல குருவின் போதனை என
இவ்வத்தனையும் எனக்கு தந்து
ஆலமரநிழலாய் காப்பவன்
என் நண்பன் அவன் நட்பு
கிடைத்தமைக்கு என்ன தவம்
செய்தேனோ நான் போன ஜென்மத்தில்
இன்னும் எனக்கு ஜென்மம் ஒன்று உண்டெனில்
இறைவா அவனுக்கு நான், அவன்போல் உயர்
நண்பனாய் பிறந்து, வாய்த்தல் வேண்டும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Mar-18, 11:25 am)
பார்வை : 740

மேலே