ஒரு தலை காதல்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொப்பனத்தில் மிதக்கிறேன்
சொல்லாத காதலால்
சொர்க்கத்திலை பறக்கிறேன்..!
மனசுக்குள்ள காதலு
மல்லுக்கட்டி துள்ளுது
மனம்விட்டு பேசதான்
மாட்டேனு சொல்லுது..!
பசுமாட்டை கண்ட
பசியுள்ள கன்று
பாலை குடிக்காமல்
பாவுலா பண்ணுது.!
அதிசய சுகம்தானே
இது அரிதானா தவம்தானே
அறுவடை செய்யாமல்
இதை அருமையா ரசிப்பேனே..!
அம்புலியின் காதல்
அல்லி மலருக்கு தெரியாது..!
அன்பு ஒளி வீசும்போது
அழகாக மலருமே..!
பனித்துளியின் காதல்
புள்வெளிக்கு தெரியாது..!
பாசமாக பொழியும்போது
பசுமையாக மாறிடுமே..!
கருவை சுமக்கும் தாய்க்கு
கடினம் என்பது இல்லையே..!
காதலை சுமக்கும் எனக்கு
கடவுள் தந்த வரம்தானே..!
விதைகள் மூடிருப்பது
விருட்சமாக வளரதானே..!
என் காதலும் அதுபோல
காலம் வந்தால் வென்றிடுமே..!
மலரிடம் மொழி பழகி
அவள் மனதினை ஆராய்வேன்..!
அவள் நினைவுகளை சேகரித்து
அதில் நிம்மதியை தேடிடுவேன்..!
நேர்மைகள் தவறாமல்
நேசமாக பழகிடுவேன்..!
அவள் நெஞ்சத்தில் நானிருந்தால்
அவள் சொல்ல காத்திருப்பேன்..!
அவள் நெஞ்சத்தில் நானிருந்தால்
அவள் சொல்ல காத்திருப்பேன்..!!!