எனக்கானவலின் கண்களில் காதலை பார்த்த போது

இந்த நாள்

நாள்தோறும் நாள்காட்டியில் நல்ல நேரம் பார்கும் எனக்கு அன்று ஒரு நாள் மட்டும் உன் நினைவுகளை எண்ணி பார்க்க வேன்றுமென்று மனம் விளையும் நாள்


தினந்தோறும் அவளை பார்த்து வந்த போதும்
அன்று அவள் எனக்கு புதிதாய் தெரிந்த நாள்

நான் பார்த்தது அவள் தானா..!
என்று
தலைகுனிந்து சிந்தித்த வேளையில் என் அருகில் வந்து அவள் அமர்ந்த நாள்

செய்வதறியாது திகைத்த என் மனதுக்கு அவள் விரல்கள் மூலம் என்னை தீண்டி இது நான் தான் என்று விடை அளித்த நாள்

உடனே
தண்ணீர் அருந்தி விட்டு வருகிறேன் என்று சொல்லி அவளிடம் இருந்து என்னை தனிமை படுத்தி கொண்ட நாள்

சுற்றி பலர் இருந்தே போதும்
அவள் கண்கள் என்னை எங்கே என்று தேடியே நாள்

என்னை தேடும் அவள் கண்களில் இருந்த ஏகத்தை மறைந்திருந்து பார்த்த என் மனம்
திகைத்த நாள்

தவிப்புடன் இருந்த அவள் கண்கள் முன் சென்று நின்ற போது அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்த நாள்

இதுதான் காதலா..!
என்று என் மனம் தவித்த வேளையில் அவள் என் கரம் பிடித்த நாள்

சற்றும் இடைவேளை இன்றி அவள் கரம் பிடித்து நடந்த போது இப்பாதை இன்னும் நீளாத என்று என் மனம் வருந்திய நாள்

எங்கள் பயணம் முடிந்த வேளையில்
நான் செல்கிறேன் என்று சொல்லிய போது என் கரங்களை விட அவள் மனம் மறுத்த நாள்

இதன்பின் வாழ்வில் அவள் கரம் எப்போது பிடிப்பேன் என்று என் மனம் தவித்த வேளையில் அவள் என்னை விட்டு சென்ற நாள்

அவள் செல்வதை பார்த்து கவலை கொண்ட என் கண்களுக்கு அவள் சிரிப்பின் மூலம் விடை அளித்த நாள்



நினைவுகள் இத்தனை
சுகமா ?
என்று உன்னை பிரிந்திருக்கும் வேளையில் என் மனம் எண்ணும்போது மீண்டும் உன்னை காதலித்து பிரிய மாட்டேனா என்று வருந்தும் நாள்


வாழ்க்கையில்
நான் கடந்து வந்த காதல் பாதையில் என் பாத சுவடுகளே மிச்சம் என்று எண்ணி திரும்பி பார்க்கயில் அழியாத சுவடுகளாய் உன் நினைவுகள்

எழுதியவர் : மூர்த்தி.R (30-Mar-18, 3:21 pm)
பார்வை : 344

மேலே