அவனுக்குத் தெரிந்தது
எட்டாத உயரத்தில்
கூடு கட்டித்
தேனைக்
கொண்டுவைக்கிறது தேனீ..
திட்டமிட்டே அதைத்
திருடிவிடுகிறான் மனிதன்,
அடுத்தவன் உழைப்பைச்
சுரண்டிடும் கலை
அவனுக்குத்தான் தெரியும்..
ஆனாலும்,
அவனுக்கே
தெரியாத கலையறிந்த
தேனீக்கள்,
ஓய்வதில்லை-
ஒன்றுசேர்ந்து தேன் சேகரிக்க...!