வாழ்க்கை இனிதாக்குவோம்

ஈரைந்து
மாதங்கள்
கருவறையே உலகம்...

மூவைந்து வருடங்கள்
ஆடிப் பாடுவதே
உலகம்...

கட்டிளம் வயதெட்டினதும்
காதலே இவ்
உலகம்...

மீசை முறுக்கத்
துவங்கியதும்
ஆசை நாயகியே
உலகம்...

குழந்தைப்பேறு
அடைந்ததும்
குடும்பமே நம்
உலகம் ...

பெற்ற பிள்ளைகளை
உற்ற நிலைக்கு
உயர்த்த முனைகையில்
உழைப்பே நம்
உலகம் ...

அனைத்தும்
அடங்கையில்
ஆண்டவனே நம்
உலகம் ...

அடங்கி
முடிந்தபின்
அடுத்த
ஜென்மம்
எதுவென்று
யாரிங்கு
அறியும்???

இன்றைய
பொழுதை
இனிதாக்குவோம்!

இருக்கும்வரை
இதயம்
மகிழ்தாக்குவோம்!

எழுதியவர் : Saravana Kumar S (22-Apr-18, 1:11 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 156

மேலே