மண்ணும் மழையும்

என்னை எதிர்பார்த்த என் நண்பனே!
என்னைக் கண்டபின் உன் உணர்ச்சிகள் என்னவோ?
இதுவரை காணாத தவிப்பில் கலங்கிடுவாயோ?
இப்போது கண்ட களிப்பில் மகிழ்ந்திடுவாயோ?
வாசனைப் பூப்போல் மலர்ந்திடுவியோ?
வாடி என்னை வதைத்திடுவாயோ?
சிரிப்பில் சிலிர்ப்பாயோ?
சினத்தில் சீறுவாயோ?
உன் வரம் எதுவாயினும் ஏற்கிறேன்
எதிர்பார்த்தாய் என்னை இத்தனை வருடங்களில்
காத்திரு வருகிறேன் சில நிமிடங்களில்
உன்னை மகிழ்விக்கும் மழையாக
உன் வறட்சியைப் போக்கும் வரமாக..

எழுதியவர் : ஸ்ரீ (1-May-18, 2:24 pm)
சேர்த்தது : ஸ்ரீஷா
Tanglish : mannum mazhaiyum
பார்வை : 217

மேலே