சிப்பிக்குள் முத்து

மேகத்திலிருந்து துளியாக வெளிவந்தேன்
காற்றடிக்கும் திசையில் சென்றேன்
செல்லுமிடம் தெரியாமல் விழி அகல
செய்வதறியாது நிலை குலைய
இறுதியில் உன் கண்களுக்குள் புகுந்தேன்
அடுத்தநொடி என்னை உன்னுள் அடைத்துக்கொண்டாய்
அனைவரும் அஞ்சினர் நீ என்னை சிறை செய்ததாய்
ஆனால் திறந்து பார்த்து வியந்தனர்
சிப்பிக்குள் புகுந்த இந்தத் துளி
முத்தாய் மாறியதைக்கண்டு மனம் நெகிழ்ந்தனர்
என்னை ஏற்று நீ மோட்சம் தந்தாய் என