342 பிழைபொறார் பிழையைப் பெருமானும் பொறான் - பிழை பொறுத்தல் 7

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

இன்னலெமக் கிழைத்ததனால் வீடிழந்து நரகாழ்வார்
..எனநி னைந்து
பன்னரிய பெரியர்பிழை பொறுப்ப’ர்’பொறார் தம்பிழையைப்
..பரம னாற்றான்
முன்னொருவன் செய்தனனென் றவற்கிறப்பச்செயுமிடரம்
..முறையி லான்சேய்
பன்னிதம ரையுஞ்சேரு மவர்நமக்கெப் பிழைசெய்தார்
..பகராய் நெஞ்சே. 7

- பிழை பொறுத்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”தனக்குத் தீங்கிழைத்தவர் அத்தீவினைப் பயனால் பேரின்பப் பெருவாழ்வை இழந்து மீளாநரகத்தில் ஆழ்ந்துவிடுவாரே என்று வருந்தி சிறப்புடைய பெரியவர் அப்பிழையைப் பொறுப்பார்.

பிழையைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் செய்யும் குற்றத்தை ஆண்டவனும் பொறுத்தருள மாட்டான்.

தனக்கு முன்பொருவர் குற்றம் செய்தார் என்று அவர்க்குத் தானும் சாவினைத் தரும் பேரிடரைச் செய்தால் அவ்விடரால் முறையில்லாத அவருடைய மக்கள், மனைவியர், உறவினர் முதலானவர்கள் துன்புறுவர்.

அவர்கள் துன்புறும்படி நமக்கு என்ன பிழை செய்தார்கள் என்று சொல் மனமே!” என்கிறார் இப்பாடலாசிரியர்.

வீடு - பேரின்பம். இறப்ப - சாவ. பகர் - சொல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-18, 6:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே