சிசுவின் கேள்வி தாய்க்கு

தமிழனாக பிறப்பதில்
மகிழ்ச்சியே எனக்கு..
கருவறையில் கேட்கிறது
தோட்டாக்களின் சத்தம்..
ஒலிக்கும் ஓலக்குரலால்
வலிக்கிறது இதயமும் ..!
எட்டி உதைக்கின்றனர்
காலால் மிதிக்கின்றனர்
அடுத்த தலைமுறையை
தடுத்து காத்திடு தாயே !
என்னைத் தாங்குபவளே
உன்நிலையே இதுவெனில்
பிறந்து வரவுள்ள என்னிலை ?
சட்டம் ஒழுங்கு சரியில்லை
திட்டமிட்ட கலவரங்கள் ..
நான் வெளிவரும் நேரத்தில்
நாடே சுடுகாடாக மாறிடுமோ !..
தமிழனுக்கு மரியாதை இல்லை
தன்மானம் இழந்து நிற்கும்நிலை !
தமிழனே தமிழனை வீழ்த்துகிறான்
தமிழ்நாடு என்ன அகதிகள் முகாமா ?
இச்சூழலில் நான் பிறக்கனுமா
அன்னையே சிந்தித்து பதிலளி !
ஊழல் ஊறிகிடக்கிறது எதிலும் ..
உண்மை செத்துக்கிடக்கிறது ..
வடக்கு மட்டும் வாழத் துடிக்கிறது
தேயும் தெற்கோ அழிவை நோக்கி !
இச்சூழலில் நான் பிறக்கனுமா
அன்னையே சிந்தித்து பதிலளி..!
இருப்பவர்க்கே நிம்மதியில்லை
உள்ளவர்க்கே உணவில்லை
துணிவுள்ள அரசும் இல்லை
திறனற்ற நிர்வாகம் இங்கு !
இச்சூழலில் நான் பிறக்கனுமா
அன்னையே சிந்தித்து பதிலளி...
தமிழ்நாடு தமிழர்களை விட்டு
விலகித்தான் செல்கிறது ...
இந்தியாவில் உள்ளதா தமிழ்நாடு ?
இச்சூழலில் நான் பிறக்கனுமா
அன்னையே சிந்தித்து பதிலளி.
இல்லையெனில் நான் உனது
கருவறையில் இறந்து விடுகிறேன். !
பழனி குமார்