மூச்சின் விலை மூச்சே !!

கனவுகளை நினைவாக்க உழைக்கின்றோம் .
தினந்தினம் நிம்மதியை இழக்கின்றோம் .

பணம் வந்தால் இனம் பார்க்கும் இதயமடா ?
உள்ளதை நீ சொல்வது மடமையடா !

சேற்றையும் காற்றையும் கொள்கிறோம்...

காவல் துறையா? அல்லது
ஏவல் துறையா?என்ற ஐயமா !
காவு வாங்குவதே இவர்களின் மையமா!!?.


உயிரையும் லஞ்சமாக கொடுத்து விட்டோம்... இனியாவது செவி சாய்க்குமா ??

நுகரும் மூச்சிற்காக
நுகர்ந்த மூச்சினை விட்டுவிட்டோம்.....

எங்கள் போராட்டம்
தெருதோறும் தேரோட்டமாக வரும்.....
ஒற்றுமையில் நாடு
விடியலை பெறும்.

எழுதியவர் : விகீரயா (23-May-18, 7:48 pm)
சேர்த்தது : Ramya
பார்வை : 34

மேலே