புலம்பல்

கண்ணீர் கரைந்தோடும் வெள்ளமானதே
இதயத்திலிருந்தும் ரத்தம் கசிகிறதே
அப்பாவி மக்களின் இறப்பை கண்டு

ஊழல் செய்பவர்கள் எல்லாம் உயர் பதவிக்கு சென்றதால்
உயிருள்ள நம்நாடு இன்று உயிரற்ற சுடுகாடானதே
மக்களை காக்க வேண்டிய அதிகாரிகளே இன்று
மக்களை கொல்லும் மிருகமானர்களே

உலகிற்க்கே உப்பளித்த எங்களால் - இன்று
உயிர் வாழ முடியவில்லையே
பெண் என்று கூட பார்க்காமல் பிணமாக்கப்பட்டனரே
இரக்கமற்ற மனிதர்களால் முத்தாய் ஜொலித்த நகர் - இன்று
ரத்தம் ஓடும் ஆறாய் மாறிவிட்டதே
அமைதியாய் இருந்த நகரம் - இன்று
கலவர பூமியாய் காட்சியளிக்கிறதே

மானை வேட்டையாடினால் கடும் தண்டனை வெளிநாட்டில்
மனிதர்களை வேட்டையாடியவர்கள் பதவியை கூட இழக்கவில்லை நம் நாட்டில்
என்ன கொடுமையடா இதுதான் சுதந்திர நாடா
ஐயோ அடிமைதனம் இன்னும் அகலவில்லையே

மனித உயிர்கள் பலியானது போதும் தமிழா
எழுந்து வா அடிமைத்தனத்தை வேரோடு அறுப்போம்

வீதிக்கு வா தலைவா
ஸ்டெர்லைட் எனும் வெளிநாட்டுக்காரனை விரட்டியடிப்போம்

துணிந்து வா என் தமிழா
துப்பாக்கி குண்டுகள் நம்மை தாக்கினாலும்
இனி வரும் தலைமுறையாவது இயற்கையோடு வாழட்டும் !!!

எழுதியவர் : M Chermalatha (23-May-18, 7:41 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : pulambal
பார்வை : 229

மேலே