மரணம் வரும் வழியில்

நீங்களும் எழுதலாம்.
நான் சோர்வுற்றேன்
தளரும் என் மனதில்
பெயர் தருவிக்காமல்
ஒளிந்து எழுதுங்கள்
இரவில் ஓசையாக
உங்கள் வருகையில்
ஒன்றும் நேரப்போவதில்லை
என்றாலும் வரவேற்பேன்.
கீழே கிடக்கும் சொற்கள்
உற்றுப்பாருங்கள் அவை
ஆவிகளின் மாயத்தில்
புனையப்பட்ட புண்கள்.
அடுக்குங்கள் எதிரெதிராக.
சபிக்கப்பட்ட தேவதைகள்
கிளைகளில் நெளிகின்றனர்.
வருவோரின் பிய்த்துப்போட்ட
கனவுகளை அப்பமாக்கி உண்டபடி
அப்பத்தில் வார்த்தைகள் உதிரும்
எழுதுங்கள் கைப்பற்றினால்
வேறென்ன சொல்வது...
இனி காத்திருப்பதெல்லாம்
மரணம் மட்டுமே.

எழுதியவர் : ஸ்பரிசன் (25-May-18, 7:25 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 73

மேலே