என் வீடு

சிட்டுக்குருவியாய் பரந்த உன்னை
விழிகளில் சிறை எடுத்தேன்....
என்
வீட்டு குருவியானாய்....

விட்டு இருந்தால் பறந்திடுவாயோ
என்று அச்சமிட்டு
உன் இதயறையில் சிறை அடைந்தேன்..

இரு வீட்டு குருவிகள்
ஒரு வீட்டு குருவிகளாய்
பறக்க

சின்ன சிறு மொட்டு உதிக்க
மொட்டு மலர்ந்து
தொட்டிலிட்டு தாலாட்டு இசைக்க

பாட்டி சொல்லும் கதையை
பாட்டுப்பாடி சுவைத்து
என் அரும்பாய் என் நெஞ்சில்
தவழ்ந்து முத்தமிட
எதிர்பார்ப்புடன்....

என்றும் என் பிள்ளைக்காக...

எழுதியவர் : லாவண்யா (30-May-18, 4:09 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : en veedu
பார்வை : 88

மேலே