பரிதி மனைவி இறந்ததற்கான இரங்கல் பா

ஐயைந்தும் ஒன்றும் சேர்ந்த
=ஆண்டுகள் துணையாய் வந்தாள்;
பொய்யன்,அக் காலன் தன்னைப்
=போற்றவோ தருமன் என்றே!
மெய்யுளம் சோர்ந்தி டாமல்
=மேன்மையப் பெண்மை எய்த
செய்யதாய் அவளோ டொன்றிச்
=சேர்ந்தாநாள் யாவும் எண்ணி

செய்வதற் கவளும் இட்டுச்
=சென்றுள கடமை ஆற்றி
மைவினை தேற்றி வாழ
=மனவலி இறைவன் சேர்க்கக்
கைவலி பெருக்கி வாழக்
=கடவுளை வேண்டு கின்றேன்!
தையலின் ஆன்மா வாட்டம்
=தவிர்த்திட இறைஞ்சு கின்றேன்!
============ ===

எழுதியவர் : எசேக்கியேல் காளியப்பன் (5-Jun-18, 6:27 am)
பார்வை : 249

மேலே