நிராசை
ஆசை படுவதால் என் ஆசை ஒன்றும்
நிராசை ஆகிவிடாது
வெண் புறாக்கழுள் சுற்றி சிறகுகளில் வண்ணம்
பூச ஆசைப்பட்டேன், சிறு குழந்தைகளால்
அது நிகழ்ந்தது
குழந்தை மனமும் வண்ணம் தீட்ட வேண்டிய
சிறகு தானே
அழகிய கூண்டுக்குள் சிறைபட்டு பதினெட்டாம்
ஆண்டு வெளி வர ஆசைப்பட்டேன், என் தந்தையால்
அது நிகழ்ந்தது
அழகிய மனையும் பதினெட்டு வரை சிறை தானே
கடவுள் இல்லா மதங்களில் புது பிறப்பெடுக்க
ஆசைப்பட்டேன் அறிவியலால் அது
நிகழ்ந்தது
அறிவியலும் ஒரு மதம் தான் அதில் கடவுளுக்கு
என்ன வேலை
கை படாமல் உணவொன்று சாப்பிட
ஆசைப்பட்டேன் அது காதலி மூலம்
நிகழ்ந்தது
முத்தமும் சுவையான உணவு தானே அதில்
கைகளுக்கு என்ன வேலை