எங்கடி நீ

நான்
முறுக்கிவிடும்
மீசையை இறக்கிவிட்டு,
கலைந்த
என்
தலைமுடியை
அழகிய விரல்களால்
கோதி,
மார்போடு
என்னை அனைத்து
தூங்க வைக்கும்
என்னவளே
எங்கடி நீ
இருக்கிறாய்.......

ஒரு முறை
என் கண்ணில்
பட்டுவிடடி
நீயும்......
என்
கண்ணுக்குள்
வைத்து
கர்விழியை போல்
பார்த்துக்கொள்வேன்
உன்னை நானும்.........

உனக்காக மட்டுமே
காத்துக்கிடக்கிறேன்......
நீ வருவாய் என்று
தினமும்
என் பார்வையை
புதுபித்து
கொண்டிருக்கிறேன்.........

உருவம்
தெரியாத உன்னை
நினைத்து...
ஒவ்வொரு நொடியும்
போகிறேன்
சாம்பலை போல
காற்றில்
கறைந்து......

உனக்கொரு
உருவம் நான்
கொடுத்திருக்கிறேன்.....
அந்த உருவத்தோடு
என்னை தேடி
நீ வருவாய் என்று
தினமும்
காத்திருக்கிறேன்.......

அவள்
என் அருகில்
நெருங்கிவிட்டால்......
உணர்ந்துவிட்டேன்
அவள் வாசனையை
என்னை தீண்டிய
காற்றில் .............!

என்னவளே
உன்னை காண
ஏழு ஜென்மங்களை
கொன்று
எட்டாவது
ஜென்மத்தை
எட்டி பிடித்திருக்கிறேன்
எங்கடி நீ................!

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (11-Jun-18, 10:41 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 1232

மேலே