சருகுகள்

நினைத்தது யாரோ
நெருங்குவ தாரோ,
கனவுகள் யாரோ
கரைவது நீரோ,
உறவுகள் யாரோ
உணர்வுகள் வேரோ,

இதழோடு நீயும்
உறங்கிடும் வேளை,
சருகுகளாகி நான்
எரிவது ஏனோ,

உறங்காத வேளை
நினைவுகளோடு,
உன்விரல் கோர்த்து
பறப்பதா யெண்ணி,
பிணியோடு நானும்
உறவாடினேனே,

நினைப்பது நானே
வலியோடு நானே,
யாகத்தின் நடுவே
சுடராகிறேனே,

கனவுகள் நீயே
கரைவது நானே,
மழையாகி நானும்
உன் உடல்
தொடும் வேளை,
உறவுகளாகி உன்
உணர்வாகிறேனே.

ந நன நான.. ந நானா நநா..
பப்பாப பப்ப ப ப பப்ப..

எழுதியவர் : தமிழினியன் (21-Jun-18, 12:05 pm)
சேர்த்தது : தமிழினியன்
Tanglish : sarukukal
பார்வை : 457

மேலே