இசையும் கவிதையும்

சில இசைக்கச்சேரியில்
முதலில் காதிற்கு பிடிபடா
ராகம் கேட்க கேட்க புரியவைக்கும்
கேட்க இசையவைக்கும் முடியும்
தருவாயில் ....ஐயோ இன்னும்
பாட கேட்கலாமே என்று
எண்ணவைக்கும் ----இப்படித்தான்
சிலரின் கவிதை வரிகள்
ஒருமுறைப் படித்தால் ஒன்றும்
புரியாது, துணிந்து சிலமுறை
படித்தால் இப்படி ஓர் எழுத்தாற்றலா
இக்கவிஞருக்கு என்று எண்ணவைக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-18, 12:27 pm)
Tanglish : isaium kavithaiyum
பார்வை : 38

மேலே