மாடி வீட்டுக் கிளியே!

மாடி வீட்டுக் கிளியே!!
நான் உன் முகம் காண
ஏணி போட்டு ஏறி வந்தேன்
நீ எனடி உன் முகத்தை
தாவணி போட்டு
மூடிக் கொண்டாய்
ஆனால் உன் வெட்கத்தை
மறைக்க அந்த தாவணிக்கு
தெரியவில்லையே
உன் சிவந்த முகத்தை
தாவணி திரையில்
கண்டு கிறங்கியவன்
ஒன்றும் பேசாமல்
கீழே இறங்கினேன்
ஆனால் என் காதலோ
உச்சத்தில்.....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (29-Jun-18, 2:35 pm)
பார்வை : 101

மேலே