நிதர்சனம்

கருவப் பிடறி வளர்ந்ததனாலே
கர்ச்சனைச் சிங்கம் ஆவாயோ?
பருவக் கொடியில் பூத்ததனாலே
பசலை படர்ந்தே திரிவாயோ?
மருமக் குகையில் நுழைந்ததனாலே
வாழ்க்கை மறந்து போவாயோ?
உருவம் மட்டும் வாய்த்ததனாலே
உண்மையில் மனிதன் ஆவாயோ?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (30-Jun-18, 7:34 pm)
பார்வை : 59

மேலே