சதுரங்கம்
காய் நகர்த்துகிறார்கள்,
மூளையின் வலுவில்.
நகர்கிறார்கள்.
நகர முயற்சிக்கிறார்கள்.
சிலரால் மட்டுமே
காய்களை வெட்டிக்கொண்டே
போக முடிகிறது,
மூளையின் பலத்தாலோ?
சந்தர்ப்ப வசத்தாலோ?
இவனை வென்ற அவன்
இன்னொருவனிடம் தோற்கிறான்.
வெட்டுப்பட்டவை
காய்களா? நியாயங்களா?