உன் இமைகள் எப்போது மாறினவோ இதழ்களாய்

இது என்ன விந்தை
அச்சோ, அச்சோ
மூடி திறக்கும்
உன் இமைகள்
விரி இதழ்களாய்
மாறியது எப்போதோ
இமைகள் மூடி திறக்கிறதா
இல்லை உன் இதழ்களா
புரியலையே எனக்கு
அதில் புன்னகையும் தெரிகிறதே
பூத்த மல்லிகைபூபோல்
இதுயென்ன மாயம்
நான் காண்பது உன் இமைகள்
இதழ்களாய் மாறி
என்னைக் காதலிக்க வா வா
என் தலைவா வா என்று
பேசுவதுபோல் நான் காண்பது
உது என்ன கனவா நெனவா

நீ வாய் மூடி மௌன
நிஷ்டையில் இருக்கும்போதும்
என்னை பார்த்தும் பார்க்காமல்
இருந்தபோதும் உன் உள்மனதில்
என்னை நினைத்துக்கொண்டே இருக்கின்றாய் நீ,
என்று கூறத்தான் இன்று உந்தன்
விழிகள் இதழ்களாய் மாறி
எனக்கு புன்னகை தருகின்றனரோ,
காதலிக்க வா தலைவா என்று கூறி !

-----------------------

எழுதியவர் : வச்சான்-தமிழ்பித்தன்-வாச (16-Jul-18, 7:57 am)
பார்வை : 67

மேலே